சசி சீரியசா சபதம் போட்ட நேரத்தில்.. டார்ச்சர் அனுபவித்த கோகுல இந்திரா- வீடியோ
former minister, gokula indira, tamil nadu February 16, 2017,
சென்னை: தமிழர்களின் பண்பாடு எவற்றையும் சாராமல்தனித்துவம் மிக்கது என சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.கவுல் கூறினார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஐகோர்ட் வளாகத்தில் இன்று பிரிவு உபசார விழா நடந்தது.
இந்த விழாவில் கவுல் பேசுகையில், தமிழர்களின் பண்பாடு எவற்றையும் சாராமல் தனித்தவம் மிக்கது. தமிழர்களின் வீரம், அன்பு என்னை மிகவும் கவர்ந்தது. தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் வியக்கத்தக்க வகையில் உள்ளது. தமிழ் சான்றோர்கள் சிறந்த நூல்களை இயற்றி சிறந்த அறிஞர்களாக விளங்கினர். நான் நீதிபதியாக தமிழகத்தில் பணியாற்றிய காலம் சிறப்பானது. மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் 3 முறை ஓங்கி அடித்து, பல்லைக் கடித்து, கர்ண கொடூரமாக ஆவேசமாக சசிகலா ஒரு பக்கம் சத்தியம் செய்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, குண்டர் ஒருவரால் பெரும் துன்பத்தை அனுபவிக்கவும் நேரிட்டது. பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு செல்வதற்கு முன்பாக சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போனார். அங்கு அதிமுகவின் வளர்மதி, கோகுல இந்திரா தவிர வேறு யாரும் தெரிந்த முகங்களே இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி கவர்னரைச் சந்தித்தார் 00:54 சசிகலா மீதான தீர்ப்புக்கு ஜெ.தீபா ஆதரவு 02:22 சசிகலா செய்தியை மறைத்த ஜெயா டிவி-வீடியோ மொத்தமே 50 பேர்தான் இருந்திருப்பார்கள்…. பெரும்பாலானோர் குண்டர்களாகத்தான் காட்சி தந்தார்கள். சிலர் சசிகலாவின் உறவினர்கள். ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தி 3 முறை ஓங்கி அடித்து பழிதீர்ப்பதாக சத்தியம் செய்து கொண்டிருந்தார். இதை அருகே நின்ற வளர்மதி, பயங்கர மிரட்சியும் பார்த்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் சசிகலாவுக்குப் பின்னால் இருந்த கோகுல இந்திராவோ குண்டர் ஒருவரின் குடைச்சலில் படாதபாடுபட்டுவிட்டார்.
English Summary:
Former Minister Gokula Indira faced sever torture by Mannaargudi Goon at Jayalalithaa Memorial.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.