தனித்துவம் மிக்க தமிழர் பண்பாடு: கவுல் பெருமிதம்
chennai, judge, S.K.kaul, supreme court, tamil nadu February 16, 2017,
சென்னை: தமிழர்களின் பண்பாடு எவற்றையும் சாராமல்தனித்துவம் மிக்கது என சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.கவுல் கூறினார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஐகோர்ட் வளாகத்தில் இன்று பிரிவு உபசார விழா நடந்தது.
இந்த விழாவில் கவுல் பேசுகையில், தமிழர்களின் பண்பாடு எவற்றையும் சாராமல் தனித்தவம் மிக்கது. தமிழர்களின் வீரம், அன்பு என்னை மிகவும் கவர்ந்தது. தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் வியக்கத்தக்க வகையில் உள்ளது. தமிழ் சான்றோர்கள் சிறந்த நூல்களை இயற்றி சிறந்த அறிஞர்களாக விளங்கினர். நான் நீதிபதியாக தமிழகத்தில் பணியாற்றிய காலம் சிறப்பானது. மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.