சிறையில் சகல வசதிகளும் கேட்கும் சசிகலா
bangalore, Black money, India, prison, shashikala February 16, 2017,
பெங்களூரு : சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. சிறைக்குள் தனக்கு செய்து வர வேண்டும் என கேட்கும் வசதிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.நீளும் பட்டியல் :
சிறையில் தனக்கு தனி அறை வேண்டும். அதில் கட்டில், டிவி இருக்க வேண்டும். வெஸ்டன் டாய்லட், 24 மணிநேர வெந்நீர் வசதி, மினரல் வாட்டர், வீட்டு சாப்பாடு, தனக்கு வேண்டியவற்றை செய்து தர தனியாக ஒரு ஆள் வேண்டும் என நேற்று கேட்டிருந்தார். ஆனால் சிறையில் அவருக்கு விஐபி அந்தஸ்து தர முடியாது என சிறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இந்நிலையில் தற்போது, தான் இருக்கும் அறையில் ஒரு மேஜை, பேன் வேண்டும். தியானம் செய்தவற்கு தனி இடம் வேண்டும். வாரத்திற்கு இருமுறை அசைவ உணவு வழங்கப்பட வேண்டும் என சசிகலா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சசிகலா, 2014ம் ஆண்டு ஜெயலலிதாவும், அவரும் 3 வாரங்கள் அடைக்கப்பட்டிருந்த அதே சிறை அறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary:
Bangalore: Bangalore convicted and jailed Shashikala black money case. Ask him to come into the prison to the list of amenities goes on day by day.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.