கூவத்தூர் விரைந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்

OPS, OPS Vs Sasikala, OPSVsSasikala, Sasikala vs OPS, tamil nadu

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா மற்றும் ஜெயலலிதா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வர உள்ள நிலையில்  தீபாவின் அண்ணன் தீபக் சசிகலாவை சந்திக்க உள்ளது ஏன்? என்று கேள்வி எழும்பியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா அண்ணன் மகளான தீபா மீது மரியாதை உள்ளதாகவும், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு தீபா தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. மேலும், ஜெ., பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க போவதாக தீபா தெரிவித்திருந்தார்.

இந்த குழப்பமான சூழலில், தீபாவின் அண்ணன் தீபக் சசிகலாவை சந்திக்க கூவத்தூர் விரைந்துள்ளது, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

— நன்றி விகடன்

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top