பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதற்கு கண்டனம் : தமிழ்நாடு பால் முகவர்கள் போராட்டம்

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதற்கு கண்டனம் : தமிழ்நாடு பால் முகவர்கள் போராட்டம்

chennai, milk agents, strike, tamil nadu, ten rupee coin
சென்னை: பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு பால் முககவர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தினர் போரட்டம் நடத்தினர். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பிற்கு பிறகு பத்து ரூபாய் நாணயங்கள் அதிகளவில் புழக்கத்திற்கு வந்தன. ஆனால் பேருந்துகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் அவற்றை வாங்க மறுப்புதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை கண்டித்து தமிழ்நாடு பால் முககவர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தினர் பத்து ரூபாய் நாணயங்களை மாலையாக போட்டு கொண்டு ரிசர்வ் வங்கி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில் 10 ரூபாய் நாணம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. எனவே அரசு சார்ந்த தனியார் வங்கிகள் அனைத்தும் 10 ரூபாய் நாணயங்களை தங்கு தடையின்றி வாங்க வேண்டும் என கோரினா். மேலும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் மீது புகார் அளிக்க இலவச தொலைபேசி புகார் எண்ணை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ரிசர்வ் வங்கி முன் பத்து ரூபாய் நாணயங்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்தனர்.

English summary:

Chennai: Chennai, Tamil Nadu to protest against the refusal to buy ten coins agents milk, workers protesting Welfare Association staged. After a ten-rupee coins to the alleviation of the high value of the notes were used on a large scale. But buses, refuse to buy them in places including shops, there are complaints. Paul condemned the Tamil Nadu agents, workers with welfare advocates put ten coins evening in protest at the Reserve Bank. 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top