நடிகர் விஷால் சஸ்பெண்ட் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு

நடிகர் விஷால் சஸ்பெண்ட் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு

actor vishal, chennai, high court, producer association, tamil nadu
சென்னை: நடிகர் விஷால் சஸ்பெண்ட் நீக்குவது குறித்து நாளைக்கும் முடிவு தெரிவிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அவ்வாறு முடிவு தெரிவிக்காவிட்டால் உயர்நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரித்தது.

இதன்பின் கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம் சங்கம் பஞ்சாயத்து செய்வதாக தான் விஷால் கூறியுள்ளார். கட்டப் பஞ்சாயத்து செய்வதாக கூறவில்லை, பேச்சு உரிமை, கருத்து சுதந்திரம் உள்ளிட்டவைகளை தடை செய்ய உரிமை இல்லை. எனவே நடிகர் விஷால் சஸ்பெண்ட் நீக்குவது குறித்து நாளைக்கும் முடிவு தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக சஸ்பெண்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்க மறுத்ததால் வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary:

Chennai: Actor Vishal suspended the decision to delete a report tomorrow that the producer association has issued  to the High Court. The results may notify us so that warnings issued by the high court. Suspended from the producer association appealed to the High Court against the actor Vishal. Appeal against the order of single judge bench headed by Chief Justice of the High Court heard today. 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top