மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் – பதறவைக்கும் உண்மை

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் – பதறவைக்கும் உண்மை

tami nadu

சென்னையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.

சென்னை திரு.வி.க நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கல்பனா. இருவருக்கும் திருமணம் ஆகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. கடந்த 11ஆம் தேதி கல்பனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சுரேஷ் திருவிக நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். 

காவல்துறையினர் கல்பனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பிரேத பரிசோதனையில் கல்பனா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுரேஷை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்பனாவை பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை திரு.வி.க நகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் – பதறவைக்கும் உண்மை

Search

Back to Top