இரண்டு வயது குழந்தையை தூக்கிவீசிய கொடூர தந்தை
tami nadu June 18, 2018,
குடிபோதையில் தனது 2 வயது குழந்தையை கொல்ல முயன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 2 வயதில் அவந்திகா என்ற பெண்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்த வேல்முருகன், அவரது மனைவி அமுதாவுடன் சண்டைபோட்டதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முத்தியதால் ஆத்திரமடைந்த வேல்முருகன் தனது ஒரே மகளான அவந்திக்காவை தூக்கி அசுரத்தனமாக தரையில் வீசிவிட்டு வீட்டிலிருந்து தப்பி சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தை அவந்திகா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய தந்தை வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> இரண்டு வயது குழந்தையை தூக்கிவீசிய கொடூர தந்தை