காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்
tami nadu June 17, 2018,
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாயின.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் பகுதியில் தீப்பற்றியது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும், நீதிபதி இருக்கை, விசாணைக்கு ஆஜராகும் நபர்கள் நிற்கும் கூண்டு, மேஜை உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்தது. மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்ததாகக் கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சொல்லப்படும் நிலையில், இதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்