மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
tami nadu June 16, 2018,
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தென் கடலோரப் பகுதிகளில் 4.3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுப்ப வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு