நாமக்கல்லில் கூலி தொழிலாளி சரமாரி வெட்டி கொலை!
tami nadu June 11, 2018,
நாமக்கல்லில் கூலி தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார். நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளது.
நாமக்கல் அடுத்த தாதம்பட்டியை சேர்ந்தவர் நல்லுசாமி(50). மரம் வெட்டும் தொழிலாளியான இவர், நேற்று மாலை கருப்பட்டிப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், மது அருந்தி உள்ளார். அப்போது அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் நல்லுசாமியை டாஸ்மாக் கடையில் இருந்து தூக்கி வந்து பரமத்தி சாலையில் உள்ள தனியார் வெல்டிங் பட்டறை அருகில் போட்டு, அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
தகவலறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது முன் விரோதம் காரணமாக நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட நல்லுசாமி, குற்ற வழக்குக்காக தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> நாமக்கல்லில் கூலி தொழிலாளி சரமாரி வெட்டி கொலை!