கோவை உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

கோவை உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

tami nadu

குளிர்பதன கிடங்கை தனியாருக்கு வாடகை  விட்டதை  கண்டித்து கோவை உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் குளிர்பதன கிடங்கு விவசாயிகள் பயன்படுத்துவதற்காக அரசால் அமைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் பயன்படுத்துவதற்கான இந்தக் குளிர்பதன கிடங்கு பயன்படுத்தாமல், அது தனியாருக்கு வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.  

இது குறித்து விவசாயிகள் உழவர் சந்தை நிர்வாகிகளிடம் பல முறை புகார் அளித்து உள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே, இந்நிலையில் இன்று திடீரென விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உழவர் சந்தையில் சிறிது நேரம் வியாபாரம் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் சிலர் அவதிக்குள்ளாயினர். பின்னர் உழவர் சந்தை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் குளிர்பதன கிடங்கை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு விடுவதாக கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> கோவை உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

Search

Back to Top