திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி அரசுப் பணியிலிருந்து இடை நீக்கம்
tami nadu February 28, 2018,
திமுக தலைவர் மு.கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த டி.எஸ்.பி., பாண்டியன் லஞ்சப் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் டி.எஸ்.பி. பாண்டியன். இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது லஞ்சப் புகார் நிலுவையில் இருந்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதி வாரியத்தில் நிலம் வாங்கியுள்ளார். அதனை விதிமுறைகளுக்கு புறம்பாக தனியாருக்கு விற்றுள்ளனர். இதனால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி அரசுப் பணியிலிருந்து இடை நீக்கம்