அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம்: ஸ்டாலின்

ALADMK, chennai, dmk, internal problem, MK stalin, tamil nadu

சென்னை: இரட்டை இலை முடக்கப்பட்டது அதிமுக உட்கட்சி பிரச்னை. இதில் தி.முக., தலையிடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.சட்டசபை வளாகத்தில் அவர் கூறியதாவது: சட்டசபையில் எந்த விதிகளும் கடைபிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இதன் முடிவு தெரிந்து தான் தீர்மானம் கொண்டு வந்தோம். இரட்டை இலை முடக்கப்பட்டதற்கு திமுக காரணமல்ல. இரட்டை இலை முடக்கப்பட்டது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை. இதில், தி.மு.க., தலையிடாது. அதிமுக சின்னம் முடக்கப்பட்டது தி.மு.க.,விற்கு சாதகம் என தவறான தகவல் பரவுகிறது. அனைவரின் நம்பிக்கையை பெறும்படி பணியாற்றுவேன் என சபாநாயகர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top