திருகோணமலையில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
death, dengue fever, srilanka, world March 7, 2017,
இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று கிண்ணியாவாசி ஒருவர் திருகோணமலை அரசினர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா குறிஞ்சாகேணியைச் சேர்ந்த 43 வயது ஹாலித், டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்; இதன்மூலம் டெங்கு நோயின் தாகத்தினால் கிண்ணியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை டெங்குநோய் மேலும் பரவாதவாறு மக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்பகுதியையும் நுளம்புகள் பரவாத வகையில், நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள், டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை தாற்காலிகமாக மூடுமாறு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனார்த்தனன், மத்திய கல்வி அமைச்சர் அகிலராஜ் காரிவாசத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை அரசினர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட பின்னர் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.