காஷ்மீரில் இரு வேறு இடங்களில் என்கவுன்டர்: பயங்கரவாதிகள் இருவர் சிக்கினர்
gun battle, India, india terrorism, kashmir, srinagar March 4, 2017,
ஸ்ரீநகர்: காஷ்மீரின் இரு வேறு இடங்களில் பயங்கரவாதிகள் பாதுகாப்புபடையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் பயங்கரவாதிகள் இருவர் சிக்கினர்.
பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தஇடத்தை பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர். இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சிக்கினர். அங்கு ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போன்று சோபியான் மாவட்டத்தில் சில்லிபோரா என்ற வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அறிந்து அந்த இடத்தில் பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டை நடத்தி அங்கு என்கவுன்டர் நடத்தினர். இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக அப்பகுதி கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.
English summary:
Srinagar: Kashmir gun battle is taking place between two different locations Guards terrorists. The two terrorists were caught.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.