சட்டசபையில் பலத்த பாதுகாப்பு

chennai, heavy security, state assembly election, tamil nadu
சென்னை : தமிழக சட்டசபையில் இன்று, முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இதனையடுத்து சட்டசபையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபையின் 10 வாசல்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை வளாகத்திற்குள் செல்ல செய்தியாளர்களின் வாகனங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன. எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட உள்ளன. எம்.எல்.ஏ.,க்கள் செல்ல தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கும் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top