மாறுவேடத்தில் தப்பித்து வந்தேன்: மதுரை தெற்கு எம்.எல்.ஏ.சரவணன்
OPS Vs Sasikala, OPSVsSasikala, Sasikala vs OPS, SasikalaVsOPS, tamil nadu February 14, 2017,சென்னை: கூவத்தூரில் இருந்தால் சசிகலாவிடம் மாட்டிக்கொள்வோம் என அங்கிருந்து தப்பி வந்தேன் என மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூறினார்.
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், மதுரை லோக்சபா எம்.பி. கோபாலாகிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரை சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர்.
எம்.எல்.ஏ. சரணவன் கூறுகையில், கூவத்தூரில் தங்கியிருந்தால் சசிகலாவிடம் மாட்டிக்கொள்வோம் என அஞ்சி மாறுவேடத்தில் தப்பித்து இங்கு வந்தேன். தமிழக மக்கள் பன்னீர்செல்வம் தான் முதல்வராக வேண்டும் என விரும்புகின்றனர். எனவே மேலும் எம்.எல்.ஏ.க்கள் பன்னீரை தேடி வருவர். சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தால் பன்னீரை தான் ஆதரிப்பார்கள் என்றார்.
மதுரை லோக்சபா எம்.பி. கேபாபாலகிருஷ்ணன் கூறுகையில், மன மகிழ்ச்சியோடு பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்துள்ளேன். அ.தி.மு.க.விற்கு நல்ல தலைமை வேண்டுமென்றால் பன்னீர்செல்வத்தை தான் அனைவரும் ஆதரிக்க வேண்டும். கட்சியை ஜெ., கட்டிகாப்பது போன்று பன்னீரும் கட்சியை கட்டிக்காப்பார் என்றார்.
— நன்றி தினமலர்
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.