பெண்ணை தாக்கிய ஊராட்சி தலைவர்; ஆந்திராவில் பரபரப்பு

incident, India, panchayat leader, Vijayawada
விஜயவாடா: மேல்நிலை தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை ஊராட்சி தலைவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஆனந்தப்பூர் மாவட்டம் ஜல்லிப்பள்ளி கிராம ஊராட்சி தலைவராக இருப்பவர் நாகராஜ். இவர் 2 பேருடன் சேர்ந்து கணவனை இழந்த பெண் ஒருவரை கடுமையாக தாக்கியும், காலால் மித்தும் தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக கெருடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையில், தாக்கப்பட்ட பெண்ணின் பெயர் சுதா எனவும், தனது வீட்டின் முன்பு மேல்நிலை தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் தாக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

English Summary:

Vijayawada: woman panchayat leader opposed to the overhead tank struck an incident has caused a stir. 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top