உ.பி.,யை சீரழிக்க நினைக்கும் இளவரசர்கள்: அமித்ஷா பேச்சு

amit shah, BJP, congress, India, meerut, samajwadi party, UP

மீரட்: காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இளவரசர்கள், உ.பி.,யை சீரழிக்க நினைப்பதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறினார்.

பிரசாரம்:

சட்டசபை தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தலைவர் அமித் ஷா மீரட்டில் பேசியதாவது:
முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கூட்டணி கட்சியின் தலைவரும், உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு நிலை மோசம் பற்றி விளக்கமளிக்க வேண்டும். அவர்கள் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லவில்லை. இருவரும் நாட்டை கொள்ளையடித்தவர்கள்.
தற்போது அவர்கள் ஒன்று சேர்ந்து உ.பி.,யை சீரழிக்க பார்க்கின்றனர். இந்த முறை மக்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பாதுகாக்கப்படும். விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படும் எனக்கூறினார்.

English Summary:

Meerut: Congress and Samajwadi Party princes, UP, it is looking to make inroads into the BJP leader Amit Shah said.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top