நான்கு பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி! பெண் பலியால் அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்

நான்கு பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி! பெண் பலியால் அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்

Uncategorized

பன்றிக்காய்ச்சல் நோயால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் இதுவரை பன்றிக் காயச்சல் நோய்க்கு மூன்று பேர் பலியாகியுள்ளனர். இன்று மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சரோஜா என்ற பெண் பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நான்கு பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நான்கு பேரும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோயால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top