எண்ணெய் கசிவு : கப்பல் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு

எண்ணெய் கசிவு : கப்பல் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு

Uncategorized

எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 28ம் தேதி ’எம்.டி.டான் காஞ்சிபுரம் (MT Dawn)' என்னும் சமையல் எரிவாயு கப்பல் மீது ’எம்.டி.பிடபுள்யூ மாப்பிள் (BW Maple)' என்னும்  எண்ணெய் கப்பல் மோதியது.

இதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் துறைமுகத்தின் பொதுமேலாளர் குப்தா அளித்த புகாரையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாப்பிள் கப்பல் நிறுவனத்தின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top