ரூ.5 கோடி போதை பொருள் பறிமுதல்
airport, chennai, cocaine, narcotics, south africa, tamil nadu January 28, 2017,
சென்னை : தென் ஆப்ரிக்காவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ,‛ கோகைன்’ என்ற போதை பொருளை, சென்னை விமான நிலையத்தில், சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்த பெண்ணையும கைது செய்தனர்.சென்னை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சோமி என்ற பெண் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பெண் பிரேசிலில் உள்ள சாவ் பவ்லோ நகரில் இருந்து அபு தாபி வழியாக சென்னை வந்து இருந்தார். அவரை சோதித்த போது, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.075 கிலோ, ‛கோகைன்’ போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.
அந்த பெண், போதை பொருளை, 82 மாத்திரைகளில் மறைத்து வைத்து, அவற்றை விழுங்கி இருந்தார். பொதுவாக போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், 200 மாத்திரைகள் வரை விழுங்கி இருப்பது சகஜம்.
அப்பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை பொருள் மிகவும் சுத்தமான தரத்தில் இருந்தது. தென் ஆப்ரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டது. எனவே, அங்கு இருக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
English summary:
Chennai: Chennai smuggled from South Africa, worth five million rupees a kilo, ‘Cocaine’, the intoxicating, Chennai Airport and Chennai Prevention Unit officers seized narcotics.
Source: ரூ.5 கோடி போதை பொருள் பறிமுதல் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.