இளநீருக்கு அதிகரிக்கும் மவுசு
chennai, tamil nadu January 28, 2017,
சென்னை : தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் மீதான விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக தற்போது தமிழகம் முழுவதும் இளநீர், நீர் மோர் போன்ற பானங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
பாரம்பரியத்திற்கு திரும்பும் தமிழர்கள் :
கோடை காலம் துவங்க உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு வரும் மார்ச் 1 ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் போன்ற அன்னிய நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்களின் விற்பனையை நிறுத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது. அன்னிய குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே இளநீர், நீர்மோர், கம்மங்கூழ் போன்ற குளிர்ச்சியான பானங்களுக்கு தமிழகம் முழுவதும் மவுசு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பெரிய கடைகளும் தற்போது இளநீர் விற்பனையை துவக்கி உள்ளன.
English Summary:
Chennai: Tamil on traditional foods and customs awareness is increasing in recent years. Currently across a part of the tender coconut water, buttermilk is increasing demand for such beverages.
Source: இளநீருக்கு அதிகரிக்கும் மவுசு – G-News
Leave a comment
You must be logged in to post a comment.