ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அப்கிரேட் செய்தி போலியானது: மக்களே உஷார்!
fake website, jio, jio news January 24, 2017,புது தில்லி: ரிலையன்ஸ் ஜியோவில் உங்களது தினசரி டவுன்லோட் அளவை அதிகரிக்க வேண்டுமா? ஜியோ 4ஜி அப்கிரேஷன் என்று வரும் செய்தி போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் போலி மட்டும் அல்ல என்றும், இந்த செய்தியின் மூலம், மக்களின் முக்கிய தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள், உங்களது தினசரி இணைய பயன்பாட்டை 1 ஜிபியில் இருந்து 10 ஜிபிக்கு அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று ஒரு லிங்க் வருகிறது.
அதனை க்ளிக் செய்தால் அதில், பயனாளரின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கேட்கப்படுகிறது. அனைத்தையும் பதிவு செய்து சப்மிட் செய்தால், இந்த லிங்க்கை உங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் அல்லது குறைந்தது 10 வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் என்று வாசகம் வருகிறது.
அந்த லிங், போலியான சலுகைகளை அறிவித்து, பயனாளர்களை உள்ளே நுழைய வைப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த லிங்கில், ரிலையன்ஸ் அல்லது ஜியோவுக்கு இந்த லிங்க் எந்த வகையிலும் தொடர்பில்லை என்றும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற போலியான லிங்குகளை நம்பி, பயனாளர்கள் தங்களது தகவல்களையும், அதை நண்பர்கள் குழுவிலும் பகிர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அப்கிரேட் செய்தி போலியானது: மக்களே உஷார்! – G-News

Leave a comment
You must be logged in to post a comment.