விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்கள்: ஸ்டாலின்

chennai, dmk, farmer suicide, MK stalin, tamil nadu
சென்னை: விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும். அமைச்சர்கள் அவதூறு பேசுவதை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்

கொச்சைபடுத்துகின்றனர்:

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வரலாறு காணாத வறட்சி காரணமாக ஒரு மாதத்தில் 125 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினேன். அதுவரை தூங்கிவழிந்த அரசு, பின்னர் அமைத்த ஆய்வுக்குழு, பலனை தரும் என எதிர்பார்த்த நிலையில், அமைச்சர்களின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிககள் தற்கொலையை தமிழக அமைச்சர்கள் இழிவுபடுத்துகின்றனர். விவசாயிகளின் தற்கொலையை கொச்சைபடுத்துவது விவசாயிகளை வஞ்சிப்பது போல் ஆகும்,

முதல்வர் பாவம்:

விவசாயிகள் உயரிழக்கவில்லை என அமைச்சர் பேசியுள்ளது விவசாயிகளை கடும் கோபப்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டில் 2500 விவசாயிகள் வறட்சி பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். ஆனால், தமிழக அரசு உண்மைகளை மறைத்து, பொய் பிரசாரம் செய்து வருகிறது. இதயத்தில் ஈரமின்றி அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அதிமுக அமைச்சர்கள் பேச்சை கட்டுப்படுத்த முதல்வருக்கு கடமை உள்ளது. அமைச்சரவை ஒற்றுமை குழைந்திருக்கும் நிலையில் முதல்வர் ஓபிஎஸ் என்ன செய்வார் பாவம். மரணமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை உடனே துவக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary:

Chennai: farmers need to prevent suicide. Stop talking to the Chief Ministers of defamation DMK leader MK Stalin said action

Source: விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்கள்: ஸ்டாலின் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top