மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., கடிதம்
chennai, fisherman, narendra modi, panneer selvam, srilanka, tamil nadu January 9, 2017,
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.தாயகம் வரும் முன்னர்:
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: இலங்கை சிறையில் இருந்த 51 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகம் வந்து சேரும் முன்னர் மேலும் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆழ்கடல் மீன்பிடிப்பு:
இலங்கை சிறையில் ஏற்கனவே உள்ள 10 மீனவர்களை சேர்த்து 20 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுடன் 118 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
English summary:
Chennai: Tamil Nadu fishermen in Sri Lankan custody Paneer Selvam has written a letter to Chief Minister Narendra Modi.
Source: மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., கடிதம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.