ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறும் காஷ்மீர் கல்லூரிகள்
commissioner, India, jammu kashmir, secretary higher education December 25, 2016,
ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அரசின் கீழ் இயங்கும் அனைத்து கல்லுாரிகளிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு உயர்கல்வித் துறை கமிஷனர் செயலர் அஸ்கார் ஹசான் சமூன் கூறியதாவது:
கல்லுாரிகளில் வை – பை:
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அரசின் கீழ் இயங்கும் அனைத்து கல்லுாரிகளிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையை விரைவில் அமல்படுத்தப்படுத்த உள்ளோம். கல்லுாரி வளாகங்களில் தேவையான வை-பை வசதிகளை ஏற்படுத்துவதற்காக தொலைதொடர்பு நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது.
மாணவர்களுக்கு பயிற்சி:
டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தை எளிதாக நடைமுறைப்படுத்தும் வகையில் கணினி ஆசிரியர்களை கொண்டு கல்லுாரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்த ஆசிரியர் குழுக்களை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Jammu – Kashmir state, all running under the system as soon as the transaction is enforceable in college money also. However, after the consultative meeting, Commissioner Secretary Higher Education camun Asghar Hassan said:
Source: ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறும் காஷ்மீர் கல்லூரிகள் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.