மல்லையாவின் சொத்துகள் 3வது முறையாக இன்று ஏலம்

India, mumbai, vijay mallya
மும்பை : விஜய் மல்லையா, வங்கிகளிடம் வாங்கிய கடனை ஈடுகட்ட அவரது சொத்துகளான கிங் பிஷர் ஹவுஸ் மற்றும் கிங் பிஷர் வில்லாவை மறு ஏலம் விட வங்கிகள் முடிவு செய்துள்ளன.

தலைமறைவு :

விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனை பெற்றுக்கொண்டு லண்டனுக்கு தலைமறைவாகி விட்டார். வங்கிகளிடம் வாங்கிய கடனை ஈடுகட்ட அவரது சொத்துகளை ஏலம் விடும் முயற்சியில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. ஆனால், யாரும் வாங்க முன்வரவில்லை.

ஆரம்ப விலையில் குறைப்பு :

இந்நிலையில் அவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் தலைமையகமான கிங் பிஷர் ஹவுஸ், 3வது முறையாக இன்று ஏலம் விடப்பட உள்ளது. மேலும் இதன் ஆரம்ப விலை ரூ.115 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விலையை விட 15 சதவீதம் குறைவு.
இதே போல் கோவாவிலுள்ள மல்லையாவின் கிங் பிஷர் வில்லாவும் 5 சதவீத விலை குறைப்புடன், ரூ.81 கோடியாக ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் 22ம் தேதி(டிச.,22) மறு ஏலம் விடப்படுகின்றன.

English Summary:

Mumbai: Vijay Mallya, to offset debts to the banks and his property Kingfisher House Kingfisher Villa banks have decided to re-auction.

Source: மல்லையாவின் சொத்துகள் 3வது முறையாக இன்று ஏலம் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top