பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் டில்லி பயணம்
chennai, modi, New delhi, O paneer selvam, tamil nadu December 19, 2016,
சென்னை : பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் இன்று காலை டில்லி புறப்பட்டு சென்றார்.
இன்று சந்திப்பு :
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ‛வர்தா’ புயல் பாதிப்பு நிவாரண நிதியை கோர முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று(டிச., 19) காலை விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். தலைமைச்செயலாளர் ராம் மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் 8 செயலாளர்கள் அவருடன் சென்றுள்ளனர். இன்று மாலை 5.10 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோரிக்கைகள் :
‘வர்தா’ புயல் பாதிப்பு சேதங்கள் அதிகமாக இருப்பதால், கூடுதல் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்க உள்ளார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ‘பாரத ரத்னா’ விருது வழங்கவும், பார்லிமென்ட் வளாகத்தில், அவரது முழு உருவ வெண்கல சிலையை நிறுவவும் பிரதமரிடம் அவர் கோரிக்கை வைக்க உள்ளார்.
English Summary:
Chennai : Tamil Nadu Chief Minister Narendra Modi to visit Delhi this morning departed Paneer Selvam.
Source: பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் டில்லி பயணம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.