பைக்கில் அமர்ந்து அடம் பிடித்த இளைஞர்: வீடியோ பாருங்க விழுந்து விழுந்து சிரிங்க…..

bike, India, indian police, kanpur, sezied, traffic
கான்பூர்: விதி மீறி பைக்கை நிறுத்திய இளைஞரிடம் பைக்கை பறிமுதல் செய்ய முடியாமல் திணறிய போக்குவரத்து போலீசார் , பைக்கில் அமர்ந்த நிலையில் இருந்த இளைஞனை மீட்பு வாகனத்துடன் ஓட்டிச் சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நோ பார்க்கிங்:

உ.பி. மாநிலம் கான்பூரில் படா சவுரஹா என்ற முக்கிய இடத்தில் நோ பார்க்கிங் பகுதியில் வேகமாக பைக்கில் வந்த இளைஞன் தனது பைக்கை நிறுத்தினார். இதை பார்த்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அந்த இளைஞனிடம் பைக்கை நிறுத்தக்கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

அடம் பிடித்த இளைஞர்:

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த இளைஞர் அபராதம் தர மறுத்து போலீிசிடம் வாக்குவாதம் செய்தார். உடனே போலீஸ்காரர். சார்ஜன்டிற்கு தகவல் கொடுத்தார். அங்கு போலீஸ் மீட்பு வாகனம் வந்தது. பைக்கை பறிமுதல் செய்து மீட்பு வாகனத்தில் ஏற்ற போலீசார் முயன்றனர். உடனே அந்த இளைஞர் பைக்கில் அமர்ந்து கொண்டு இறங்க மறுத்தார். தொடர்ந்து அடம்பிடித்த அந்த இளைஞனை போக்குவரத்து போலீசார் அப்படியே பைக்குடன் குண்டுகட்டாக தூக்கி மீ்ட்பு வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இதன் வீடியோ காட்சி வைரலாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் தங்களது கருத்தை பதிவேற்றினர்.

English summary:

Kanpur: Rule violation Bike traffic police stopped the young man struggled with the bike can not be seized,The teenager was sitting on the bike with the recovery of the vehicle that was driving the spread of a viral video and social networking sites.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top