3 லோக்சபா, 12 சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

announcement, assembly contituency, election, India, lok sabha
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், 12 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரலில் இடைத்தேர்தல் நடக்கிறது.

தமிழகம் உட்பட, 10 மாநிலங்களில் காலியாகவுள்ள, லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன், நேற்று அறிவித்தது. அதன்படி, கேரளாவில், முஸ்லிம் லீக் தலைவர் அகமது, சமீபத்தில் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து, காலியாகவுள்ள மலப்புரம் லோக்சபா தொகுதியில், ஏப்ரல், 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது.

ஜம்மு – காஷ்மீரில், மக்கள் ஜனநாயகபல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், 12 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரலில் இடைத்தேர்தல் நடக்கிறது.

‘புதிய சட்டம் தேவை’ :

உத்தர பிரதேச உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறியதாவது: தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டு, தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தற்போதைய அரசியல் சூழலில், புதுப்புது பிரச்னைகள் உருவாகின்றன. அவற்றை சந்தித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் தேவை. அப்போதுதான், முழுமையான தேர்தல் சீர்திருத்தத்தை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top