இன்று (20ம்தேதி) சிக்கும் அரசியல்வாதி யார் ?
India, New delhi, subramaniya samy February 20, 2017,புதுடில்லி: பரபரப்புக்கு சொந்தக்காரரான சுப்பிரமணியன் சாமி, இன்று(பிப்.,20) ஒரு முக்கிய தகவலை வெளியிட உள்ளதாக டுவிட்டரில் நேற்று தெரிவித்திருந்தார். அது யாராக இருக்கும் என்ற பீதி அரசியல்வாதிகளிடம் ஏற்பட்டுள்ளது.
சாமி கூறியிருப்பதாவது: நான்,, நாளை (இன்று) ஒரு விஷயத்தை வெளிக்கொணர இருக்கிறேன். அது ஒரு அரசியல்வாதியாக இருக்க கூடும். அவர் மீதான விசாரணைக்கு பின்னர் மேலும் ஒருவரை கையில் எடுக்க உள்ளேன். ஒரே நேரத்தில் இது நடக்கும். இவ்வாறு சாமி கூறியுள்ளார்.
இவரது டுவிட் அரசியல்வாதிகளிடம் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.