கிருஷ்ணகிரி | பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்து கோவாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர் கைது – 80 பவுன் நகைகள் மீட்பு

கிருஷ்ணகிரி | பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்து கோவாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர் கைது – 80 பவுன் நகைகள் மீட்பு

Uncategorized

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்துவிட்டு, நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி பாலாஜி நகரை சேர்ந்தவர் மோகன். கடந்த 15ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக எஸ்பி சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்ஐ பிரபாகரன், எஸ்எஸ்ஐ ராஜா, ஏட்டு சாரதி, போலீஸ் ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீஸார், கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

….

Source: Hindu

Read More >> கிருஷ்ணகிரி | பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்து கோவாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர் கைது – 80 பவுன் நகைகள் மீட்பு

Search

Back to Top