சென்னை | பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
Uncategorized March 24, 2025,
சென்னை: பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி இரவு 10.30 மணியளவில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘நீங்கள் இருக்கிற இடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.
அது 5 நிமிடத்தில் வெடித்து சிதறும்’ எனக்கூறி இணைப்பை துண்டித்தார். இதையடுத்து, போலீஸார் வெடி குண்டு நிபுணர்களுடன் சென்று காவல் கட்டுப்பாட்டு அறையில் சோதனை மேற்கொண்டனர். வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. எனவே, மிரட்டல் வதந்தி என்பது உறுதியானது. மிரட்டல் வந்த செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து விசாரித்த போலீஸார், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த லிங்கபூபதி (20) என்பவரை கைது செய்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது