சென்னை | பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை | பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Uncategorized

சென்னை: பெட்​ரோல் பங்க் மேலா​ளர் என நினைத்து சென்​னை​யில் உள்ள காவல் கட்டுப்​பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். கடந்த 20-ம் தேதி இரவு 10.30 மணி​யள​வில் சென்னை எழும்​பூர், பாந்தி​யன் சாலை​யில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு போன் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர், ‘நீங்​கள் இருக்​கிற இடத்​தில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன்.

அது 5 நிமிடத்​தில் வெடித்து சிதறும்’ எனக்​கூறி இணைப்பை துண்​டித்​தார். இதையடுத்​து, போலீ​ஸார் வெடி குண்டு​ நிபுணர்​களு​டன் சென்று காவல் கட்​டுப்​பாட்டு அறை​யில் சோதனை மேற்​கொண்​டனர். வெடிபொருட்​கள் எது​வும் சிக்​க​வில்​லை. எனவே, மிரட்​டல் வதந்தி என்பது உறுதியானது. மிரட்​டல் வந்த செல்​போன் எண்ணை அடிப்​படை​யாக வைத்து விசாரித்த போலீஸார், திருப்​பூர் மாவட்​டம், உடுமலைப்​பேட்​டையை சேர்ந்த லிங்​கபூபதி (20) என்​பவரை கைது செய்​தனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Search

Back to Top