ரூ.30 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

ரூ.30 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

Uncategorized

இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான, 800 கிலோ கடல் அட்டைகளை, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ல புதுக்கோட்டை பகுதியில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுக்கோட்டை ஜோதி நகரில் உள்ள கிடங்கில் நேற்று காலை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 800 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடல் அட்டைகள் மற்றும் அவற்றைக் கடத்தி வந்த மினி வேனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

….

Source: Hindu

Read More >> ரூ.30 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

Search

Back to Top