கரூர் தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில் டிட்கோ சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கைது

கரூர் தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில் டிட்கோ சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கைது

Uncategorized

தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தில் (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வருபவர் சூர்யபிரகாஷ் (51). இவர், கரூர் மாவட்டத்தில் 2016-2019-ம் ஆண்டுகளில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றினார். அப்போது, கரூரில் உள்ள தொழிலதிபர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2021-2022-ல் கரூரைச் சேர்ந்த கொசுவலை நிறுவன தொழிலதிபர் நல்லமுத்துவிடம், கொசுவலை ஆர்டர் பெற்றுத் தருவதாகக் கூறி சூர்யபிரகாஷ் ரூ.8 கோடி பெற்றுள்ளார். மேலும், சூரிய ஒளி மின்சக்தி நிறுவனத்தில் ரூ.8 கோடியை முதலீடு செய்ய வைத்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> கரூர் தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில் டிட்கோ சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கைது

Search

Back to Top