நாமக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்: காவல் துறை விசாரணை
Uncategorized March 4, 2025,
நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியரின் மனைவி, மகள் மற்றும் ஒன்றரை வயது மகன் ஆகிய 3 பேரும் வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் பதிநகரைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மோகனப்பிரியா (33) என்ற மனைவி, பிரிநித்திராஜ் (6) என்ற மகள், ஒன்றரை வயதில் பிரினிராஜ் என்ற மகனும் இருந்தனர். இன்று மதியம் வரை பிரேம்ராஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது மோகனப்பிரியா மற்றும் அவரது மகள், மகன் ஆகிய 3 பேரும் உயிரிழந்து கிடந்தனர்.
….
Source: Hindu
Read More >> நாமக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்: காவல் துறை விசாரணை