மேற்கு வங்கம் | போன் வாங்க 8 மாத குழந்தையை விற்ற பெற்றோர் கைது
Uncategorized July 28, 2023,
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதியர், ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தங்களது 8 மாத குழந்தையை விற்றுள்ளனர். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் நடந்துள்ளது.
தம்பதியர் அடிக்கடி வெளியூர் சென்று வருவதும், கையில் புதிய போனை வைத்திருந்ததையும் அவர்கள் வசித்து வந்த பகுதியை சேர்ந்த அக்கம் பக்கத்தினர் கவனித்து காவல் துறையில் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது. இந்த செயலை செய்த தம்பதியரான ஜெயதேவ் கோஷ் மற்றும் சதி தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல்.
….
Source: Hindu
Read More >> மேற்கு வங்கம் | போன் வாங்க 8 மாத குழந்தையை விற்ற பெற்றோர் கைது