மதுரை அருகே வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு: இரு இளைஞர்கள் கைது
Uncategorized July 28, 2023,
மதுரை: மதுரை அருகே இரு தரப்பினருக்குள் நடந்த மோதல் எதிரொலியாக வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், கொந்தகை அருகிலுள்ள கட்டமன்கோட்டையைச் சேர்ந்தவர் மகாமுனி. இவரது மகன் சவுந்திரபாண்டியன். இவர் நெடுங்குளம் மெயின்ரோடு சத்யாநகரில் டீக்கடை நடத்துகிறார். கடந்த 18-ம் தேதி சவுந்திரபாண்டியனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் பொதுப் பாதை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் அதே ஊரைச் சேர்ந்த சப்பாணி என்பவர் காயமடைந்தார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணிக்கு சப்பாணி வீட்டு வாசலில் 2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சவுந்திரன் டீக் கடையின் முன்பாகவும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
….
Source: Hindu
Read More >> மதுரை அருகே வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு: இரு இளைஞர்கள் கைது