தஞ்சை நிறுவனத்தில் ரூ.1,000 கோடி மோசடி: தலைமறைவான 3 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
Uncategorized March 22, 2023,
மதுரை: இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் போலீஸார் தேடி வரும் 3 பேரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் கம்பெனியை நடத்தி வந்தார். இவர் தங்கள் கம்பெனியில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.11 ஆயிரம் வீதம் வழங்குவதாக கூறியுள்ளார். இதை நம்பி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். 2020 பிப்ரவரி மாதம் வரை முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.
….
Source: Hindu
Read More >> தஞ்சை நிறுவனத்தில் ரூ.1,000 கோடி மோசடி: தலைமறைவான 3 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி