பிரிட்டன் பார்லி. அருகே தாக்குதலுக்கு: ஐ.எஸ்.பொறுப்பேற்பு
ISIS, london, terrisom, terrorist attack, world March 24, 2017,
லண்டன்: லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பாலம் அருகே, மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலியாயினர் 12 பேர் காயம் அடைந்தனர். சுதாரித்த போலீசார் அவன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவன் பலியானான். பாலத்திற்கு மிக அருகில், அந்நாட்டு பார்லிமென்ட் அமைந்துள்ளதால், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், பார்லிமென்ட் ஊழியர்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இ்ந்நிலையில் இத்தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டன் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலுக்கு தொடர்புள்ளதாக 8 பேரை கைது செய்துள்ளனர்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.