கமல் மீது வழக்கு : விசாரித்து அறிக்கை தர கோர்ட் உத்தரவு

court, kamal hassan, tamil nadu, tirunelveli
திருநெல்வேலி: மகாபாரதம் குறித்து இழிவாக பேசியதாக நடிகர் கமல் மீது தொடரப்ட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தர போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கமல், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசிய கமல் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் பழவூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பழவூர் போலீஸ் நிலைய போலீசார் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top