'அமெரிக்க சம்பவங்களால் வேதனை' : ராஜ்நாத் சிங்
India, New delhi, punishment, union minister rajnath singh, US March 10, 2017,
புதுடில்லி: ‘அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது என பார்லி.,யில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தின், முதல் நாளான நேற்று, லோக்சபா துவங்கியதும், பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச வேண்டுமென, உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ‘அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என, எம்.பி.,க்கள் வலியறுத்தினர்.
வேதனையளிக்கிறது:
இதற்கு பதிலளித்த, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது. இந்த பிரச்னையை, மத்திய அரசு மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, அடுத்த வாரத்தில், பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,” என்றார்.
English summary:
NEW DELHI: “It is distressing that the barley was gunned down the Indians in the United States., The Union Home Minister Rajnath Singh said.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.