'மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பாக்., அமைப்பே காரணம்': ஒப்புக்கொண்டது பாக்.,
former nationl security adviser, India, mohamud ali durrai, mumbai, New delhi, pakistan based terrorist March 7, 2017,
புதுடில்லி: கடந்த, 2008ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை, பாகிஸ்தானைச் சேர்ந்த, பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியதாக, பாக்., முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மஹ்முது அலி துரானி கூறியுள்ளார்.
கடந்த, 2008ல், மும்பையில் ஊடுருவிய, பாக்., பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களில், நுாற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
சிறந்த உதாரணம் :
இந்த சம்பவம் குறித்து, டில்லியில் நடந்த, பயங்கரவாதம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற, பாக்., முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மஹ்முது அலி துரானி பேசியதாவது: பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பு, 2008ல், மும்பையில், பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியது. எல்லை தாண்டிய பயங்கரவாத சம்பவத்திற்கு, ஒரு சிறந்த உதாரணமாக, அந்த சம்பவம் திகழ்கிறது. இருப்பினும், இந்த சம்பவத்தின் பின்னணியில், பாக்., அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. பாகிஸ்தானில், தடை செய்யப்பட்ட அமைப்பான, ஜமாத் உத் தாவா தலைவன், ஹபிஸ் சயீத்திற்கு, நல்ல நோக்கம் எதுவும் கிடையாது. அவனுக்கு எதிராக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை :
ஜமாத் உத் தாவா தலைவன், ஹபிஸ் சயீத், மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால், 2009ல், பாக்., கோர்ட், அவனை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
English summary:
New Delhi: The last, in 2008, the terrorist attacks in Mumbai, the Pakistan-based terrorist organization cures, and Bach., Former National Security Adviser Mahmud Ali Durrani said.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.