கேரளாவில் 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 6 பேர் கைது

arrest, India, kerala, sexual harassment, thiruvananthapuram
திருவனந்தபுரம்: கேரளாவில் வயநாட்டில், காப்பகம் ஒன்றில் 2 மாதமாக மிரட்டி 6 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

புகார்:

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: பள்ளி முடித்து காப்பகம் திரும்பும் அந்த சிறுமிகளை, 6 பேர் கும்பல் ஒன்று, கடைக்கு அழைத்து சென்று பலவற்றை வாங்கிக்கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இதனை வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதுகாவலர் ஒருவர் இதனை நேரில் பார்த்து காப்பகத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து கடந்த 5ம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கு:

இதனையடுத்து போலீசார் 6 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தியதில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து அந்நபர்கள் மீது, கற்பழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகம்:

அந்த கும்பலில் இருந்து சிலர் தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். காப்பகத்தில் வசிக்கும் மேலும் சில சிறுமிகளுக்கு, கும்பலால் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

English summary:

Thiruvananthapuram: Kerala Wayanad, the archive of one of the girls in the 2 to 6 month threat of sexual molestation, police arrested 6 persons.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top