கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது

2000 notes, India, kolkata, money seized
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்குவங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் முக்கிய பஜார் ஒன்றில் கள்ள நோட்டுக் கும்பல் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் 5 பேர் சிக்கினர்.

மொபைல் போன் வாங்க வந்தவர்கள்:

அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ. 56 லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸ் இணை ஆணையர் ஒருவர் கூறுகையில்,கைதான 5 பேரும், மொபைல் போன்களை மொத்தமாக வாங்க வந்தவர்கள் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து படித்தோம் என்றார்.

நாட்டில் இது போன்று அதிக தொகையிலான கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என போலீசார் தெரிவித்தனர்.

English Summary:

Kolkata: West Bengal police had hoarded 2,000 rupees counterfeit money was seized in the raid.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top