சசிகலாவை காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சி: கே.பி.முனுசாமி தாக்கு

chennai, jayalalitha, munisamy, tami nadu
சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் இருந்து சசிகலாவை காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சி செய்கிறார் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் மீது தாக்கு :

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில், கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செங்கோட்டையன் துரோகம் செய்து விட்டார். சசிகலாவை காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சி செய்கிறார். சசிகலாவை காப்பாற்றுவதற்காக கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாக பொய் தகவல் சொல்கிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த வரை அவரை பார்த்ததாக செங்கோட்டையன் ஏன் கூறவில்லை? உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவதை செங்கோட்டையன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரை நேரில் பார்த்ததாக யாரும் கூறவில்லை. அதிமுக.,விற்கு சம்பந்தம் இல்லாதவர் டி.டி.வி.தினகரன். அதனால் அவரைப் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஓ.பி.எஸ்.,ன் சுற்றுப் பயண தேதி அறிவிக்கப்படும் என்றார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top