இந்த அரசு நீடிக்க வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
chennai, pon radhakrishna, tamil nadu February 20, 2017,
சென்னை:‛‛ தமிழகத்தில் இந்த அரசு நீடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்,” என, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.தி.மு.க.,வுக்கு கண்டனம்:
கோவில்பட்டியில், இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக சட்டசபையில், சபாநாயகர் தெரிவித்த கருத்துக்கள் தேவையில்லாதது. அதேபோல், தி.மு.க., உறுப்பினர்களின் செயல்களையும் ஏற்க முடியாது. இந்த அரசு நீடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். மத்திய அரசு ஒத்துழைப்பு தரும். ‛நீட்’ தேர்வு குறித்து, கடந்த ஒரு ஆண்டில் சட்டசபையில் என்ன பேசி உள்ளனர் என்று கூற முடியுமா. தேர்வு நடக்கும் போது மட்டும் அதுபற்றி பேச கூடாது. மாணவர்களுக்கு நல்ல கல்வி தராமல் கடந்த, 50 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன. ஒரு அரசு பள்ளி மூடப்பட்டால், 100 மாணவர்கள் இலவச கல்வி இழப்பர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.