கூவத்தூரில் ஒரே நாளில் 25 எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி

chennai, kuvattur, minister edappadi palanisamy, MLA, shashikala, tamil nadu
சென்னை: சசிகலா, எடப்பாடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து நேற்று(பிப்.,15) ஒரே நாளில் மட்டும் 25 எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

சசி, எடப்பாடி மீது வழக்கு:

கடந்த 8 நாட்களாக கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறை வைகப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. சசி தரப்பினர் அனுமதி வழங்கிய எம்.எல்.ஏ.,க்கள் சிலர் மட்டுமே பேட்டியளித்து வந்தனர். இந்நிலையில் அ.தி.மு.க.,வின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட சிலர் மீது, எம்.எல்.ஏ., சரவணன் கொடுத்த புகாரின் பேரின், இந்திய தண்டனை சட்டமான ஐ.பி.சி.,யின் கடுமையான பிரிவுகளின் கீழ், கூவத்தூர் போலீசார் நேற்று(பிப்.,15) வழக்கு பதிவு செய்தனர்.

பேட்டி:

இதனைத் தொடர்ந்து ‛கோல்டன் பே’ ரிசார்ட் நுழைவாயிலில், எம்.எல்.ஏ.,க்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் நரசிம்மன்(திருத்தணி), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), தங்கதுரை(நிலக்கோட்டை), குணசேகரன்(திருப்பூர் தெற்கு தொகுதி), சத்திய நாராயணன்(தி.நகர்) மற்றும் கூட்டாக பேட்டியளித்த 10 பெண் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 25 எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஒரே நாளில் பேட்டி கொடுத்தனர்.

English Summary:

Chennai: Shashikala, Edappadi arrangement held charge yesterday (Feb. 15) on the same day, only 25 MLAs in kuvattur told reporters.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top